Sunday, April 17, 2011

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் சொல்லும் செய்திகள் ...


காந்தியவாதி சமுகசீர்த்திருத்தவாதி என்றறியப்பட்ட  அன்னா ஹசாரே 40 வருடங்களாக தள்ளிபோடப்பட்டு வரும் லோக் பால் மசோதாவை கொண்டுவரும்படிக் கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அவ்வளவுதான் திறந்த கண் திறந்தபடி இருக்க ஓன்றன் பின் ஒன்றாக பின் தொடர்ந்து செல்லும் ஆட்டு மந்தைகள் போல அன்னா ஹசாரே பின்னால் இலட்சம் பேர் திரண்டு விட்டனர். தீ பற்றிக்கொண்டது. ஆயிரமாயிரம் அநியாயங்கள் நடந்த போதெல்லாம் வராத உணர்ச்சி ஒரு வழியாக மக்களுக்கு வந்தே  விட்டது. ஆங்காங்கே உண்ணாவிரதமிருந்து சாக பல பேர் துணிந்து விட்டனர். காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊழல் பேயை விரட்டிய பரிதாபக் காட்சிகள் அரங்கேறின. இதுநாள்வரை வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த காந்திகள் உயிர் பெற்று ஓடி வந்தனர். உலகின் பின் தங்கிய நாடுகளில் இப்போது புரட்சி சீசன் நடப்பதைப்போல இந்தியாவிலும் நடக்கிறதோ என்று உலகமே வியந்தது.


ஆனால் ஆளும் மந்திரிகள் இந்த விசயத்தில் நாங்களும் நீங்களும் ஒன்றுதான் வாருங்கள் ஊழல் பேயை சேர்ந்தே  விரட்டுவோம் என்று இவர்கள் கூடவே கைகோர்த்துக்கொண்டார்கள். யார் யாரை எதற்காக எப்படி எதிர்க்கிறார்கள்  என்றே தெரியவில்லை. இந்நிலையில் தன் தைரியம் இல்லாத அரசை நாட்டமை செய்யத்துவங்கி விட்டார் அன்னஹசாரே.  இந்த நாலு நாள் magic பல செய்திகளை நமக்குச்  சொல்கிறது.

 முதலாவது செய்தி - மக்கள் நினைத்தால் எந்த சட்டமும் தேவையில்லை ஆளும் அரசை தூக்கி எறிய முடியும்.
இரண்டாவது செய்தி - இந்திய அரசியல்வாதிகளின் உழல், முறைகேடுகளைக்கண்டு மக்கள் கொதித்து போயுள்ளனர்.

மூன்றாவது முக்கிய செய்தி - மக்களுக்கு அரசியல் அறிவும் கிடையாது, அக்கறையும் கிடையாது சிறிது கவனம் கூட கொடுக்க முடியாது. ஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உண்டு.

கவனிக்க வேண்டிய செய்தி - மக்கள் வெறும்  ஆட்டு மந்தைகள்தான் அரசியல் பாமரத்தனம் அவர்களிடம் பொங்கி வழிகிறது.

 அதிர்ச்சி அளிக்கும் செய்தியொன்றும் இருக்கிறது அதாவது, அளவில்லாத அதிகாரம்கொண்டவராகக்  கடவுளைக்காட்டி கடவுளின் பெயரைச் சொல்லி ஆண்ட கதையைப்போலவே சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவராக காந்தியைக் காட்டிஅவர் பின்னால் நின்றுகொண்டு  நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதைப் போலவே இன்றும் மக்கள் அதிகாரத்தை பெறமுடிகிற வாய்ப்பும் போக்கும் தலைதுக்குவதுதான் அந்த செய்தி.

 ஏன் இப்படிச்சொல்ல வேண்டும்  ...
                        அன்னாஹசாரேவும் அவரதுபின்னால் இருப்பவர்களும் கேட்பதுபோல ஜன லோக்பால் மசோதா கொண்டு வந்து விட்டால் நாட்டை விட்டு ஊழல் விரட்டப்பட்டு விடும்; அது ஒழிந்தால் வறுமை ஒழிந்து விடும்; அநியாயங்கள் அராஜகங்கள் அடங்கிவிடும்; எல்லாப் பீடைகளும் தொலைந்துவிடும். என்றெல்லாம்  மக்கள் நம்புவது எவ்வளவு பேதைமை. “பின் மடையை அடைக்க முடியாது’ என்று விவசாயிகளுக்கு நன்றாகத்தெரியும் அது போல ஊழல் ஏன் உற்பத்தியாகிறது என்று சற்றும் யோசிக்காமல் அந்த ஓட்டையை அடைக்க முற்படாமல் பொங்கி வரும் நதியை கையால் தடுக்க முனைவதை எப்படி வர்ணிப்பது. அப்படிச்செய்து அடைத்து விடலாம் என்று சொல்வதை எப்படி நம்புவது. இன்று ஊழலில் கொடுப்பவர் வாங்குபவர் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் victims என்றுதான் சொல்லமுடியும். ஏனெனில் கொடுப்பவர் கொடுக்க நினைக்கவில்லை வாங்குபவர் வாங்க நினைக்கவில்லை பொழைப்பை நடத்த வேறு வழியில்லை. வெட்கமில்லாமல் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. அதாவது, இன்றைக்கு இலஞ்சம் கொடுக்க முடிவதால்தான்  நிறுவனங்கள், வியாபாரிகள் தொழில் செய்ய முடிகிறது. இல்லையென்றால் அதிகாரிகள் நாடு வகுத்து  வைத்திருக்கிற சட்ட திட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பார்களென்றால் வரி வசூலிப்பார்களென்றால் அரசின் படிக்கட்டுகளில் பொது மக்கள் காத்து  கிடக்க வேண்டியதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இளையதலைமுறையினரை ஆயுதம் தூக்க வைத்திருக்கும். அமைதி நாட்டில் தொலைந்து போயிருக்கும்.

எனவே இலஞ்சம், ஊழல், சட்ட மீறல், கிரிமினல் நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணம் நாட்டுமக்களுக்கு பொருந்தாத சட்ட திட்டங்களும் அதிகமான வரியும்தான் இதை யாரும் கவனிப்பதில்லை. இந்த உண்மையைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இப்போதுகூட அன்னாஹசாரே பரிந்துரைத்துள்ள சாந்திபுசன் 200 கோடியை எந்தவிதமான அநியாயத்திற்கும் ஆட்படாமல் சேர்த்திருக்கமுடியாது என்கிற தைரியத்தில்தான் பிரச்சினை எழும்பி வருகிறது. இது ஒரு காரணம்.
                      அரசியலை புறக்கணித்துவிட்டு பிறகு அதை குறை சொல்லக் கூடாது. நாட்டுபிரசினைகளைக் கண்டுணர்ந்து மக்களுக்கு நியாயத்தை உணர்த்தி நல்ல அரசியல் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறமுடியாதவர்கள் அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு ஊரில் ஒரே ஒரு நல்லகாரியத்தை செய்துவிடுவதால் மட்டும் நாட்டை ஆள்கிற தகுதியும் அறிவும் வந்து விடாது. நல்லவர் என்கிற தகுதி மட்டும் போதாது என்பதை மக்கள் உணரவேண்டும். ஜனநாயக வழிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இப்படி குறுக்கு வழியில் சென்று மிரட்டுவது ஒரு பின்பற்றப்படவேண்டிய வழிமுறை அல்ல. இது அவசரக்குடுக்கைகளின் வேலை. இது சரியென்றால் நாம் ஏன் தீவிரவாதிகளை ஆதரிக்க கூடாது. நாம் ஏன் அரசியலமைப்பை வகுத்து வைத்திருக்க வேண்டும். இப்போதுகூட தவறானவர்கள் என்றால் ஏன் அரசியல்வாதிகளை ஆட்சி செய்ய  அனுமதிக்கவேண்டும். கெட்டுப்போன அரசியலை சீர்ப்படுத்த  இதுவல்ல வழி. ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்றாவது மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடாதா .

                       நல்லவர்கள் அரசியல் விவரமறிந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் மக்களுக்கு பொருந்துகிற நியாயமான கொள்கைகளால் மக்கள் ஆளப்படவேண்டும் அதுதான் முறை. மற்றதெல்லாம் போலிகள். அப்பாதைகளில் போனால் ஏமாற்றப்படுவார்கள் என்பது உறுதி.

2 comments:

  1. sir

    i have read u r article. we loved it. simple and straight forward. we are of the opinion that the u can coordinate with like minded people to realise our dreams.

    we have to think social evils also.

    tan q

    ReplyDelete
  2. i have read ur article, what u have said every thing true, we have to explain this message to public, i dont how ?

    ReplyDelete